Friday, January 14, 2011

பொங்கல் கவிதை

உழைப்பின் ப‌ல‌ன் பொங்க‌

உள்ள‌த்துள் உவ‌கை பொங்க‌

உலையில் பால் பொங்க‌

உதிப்ப‌து தைப்பொங்க‌ல். . .

- - - - - - - - - - - - - - - - - - - - - - - -

மஞ்சள் கொத்தோடு
மாமரத்து இலையோடு
இஞ்சித் தண்டோடு
எறும்பூரும் கரும்போடு


வீட்டுப் பசுமாடும்
வயலேறும் எருதுகளும்
பாட்டுச் சலங்கைகட்டி
பொன்னழகுப் பொட்டுவச்சி

தோட்டத் தெருவெல்லாம்
தொலைதூர வெளியெல்லாம்
ஆட்டம் போட்டுவரும்
அழகுமணிப் பொங்கலிது


அன்னம் கொடுப்பவளின்
அருமைகளை எண்ணிமனம்
நன்றிப் பெருக்கோடு
நிலம்வணங்கும் பொங்கலிது

பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்
பொங்கலோ பொங்கல்

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -